முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடி சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமி: வங்கிப் பணிக்கு தேர்வானவர்களுக்கு பாராட்டு

தூத்துக்குடி சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமியில் படித்து வங்கிப் பணிக்குத் தேர்வான 222 பேருக்கு பாராட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:53 PM
பகிர்:

தூத்துக்குடி சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமியில் படித்து வங்கிப் பணிக்குத் தேர்வான 222 பேருக்கு பாராட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தூத்துக்குடியில் உள்ள சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமியில் படித்தவர்களில் குரூப்-2 தேர்வில் 103 பேரும்,  வங்கி அதிகாரி மற்றும் உதவியாளர் பணிக்கு 222 பேரும் தேர்வு செய்யப்பட்டனர்.  அவர்களில் 103 பேருக்கு பாராட்டு விழா கடந்த 15 ஆம் தேதி நடைபெற்றது.
இந்நிலையில், வங்கிப் பணிக்கு தேர்வான 222 பேருக்கு பாராட்டு விழா, அகாதெமியில் உள்ள அப்துல்கலாம் கலையரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.  
 நிறுவனர் து. சுகேஷ் சாமுவேல் தலைமை வகித்தார்.  வங்கிப் பணி தேர்வு ஒருங்கிணைப்பாளர் டி.எம். ராஜா முன்னிலை வகித்தார். தொடர்ந்து, வங்கிப் பணிக்கு தேர்வான 222 பேருக்கும் பதக்கங்கள் வழங்கப்பட்டது.  பின்னர், அவர்கள் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.  இதில், அகாதெமியில் படித்து வரும் 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
பின்னர், சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமி நிறுவனர் து. சுகேஷ் சாமுவேல் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் குறைந்த பயிற்சிக் கட்டணத்தில்  போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி அளித்து வருகிறோம்; ஆசிரியர் தகுதித் தேர்வு மற்றும் பாரத ஸ்டேட் வங்கிப் பணிக்கு மே 13 ஆம் தேதியும், குரூப்-1 மற்றும் 2 தேர்வுக்கு மே 27 ஆம் தேதியும் பயிற்சி வகுப்புகள் தொடங்குகிறது என்றார் அவர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →