முகப்பு
தூத்துக்குடி

கோவில்பட்டியில் தலைக்கவச விழிப்புணர்வுப் பிரசாரம்

தலைக்கவசத்தின் அவசியத்தை வலியுறுத்தி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் மகேந்திரன் உத்தரவின் பேரில், காவல் துறை

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:10 PM
பகிர்:

தலைக்கவசத்தின் அவசியத்தை வலியுறுத்தி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் மகேந்திரன் உத்தரவின் பேரில், காவல் துறை சார்பில் போலீஸார் கோவில்பட்டி பகுதியில் விழிப்புணர்வு பிரசாரத்தை ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்டனர். 
கோவில்பட்டி காவல் நிலையம், ஆக்டிவ் மைண்ட்ஸ் அறக்கட்டளை ஆகியவை இணைந்து மேற்கொண்ட இந்த  விழிப்புணர்வுப் பிரசாரத்தை டி.எஸ்.பி. ஜெபராஜ் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.  
இந்த பிரசார பேரணி அய்யனேரி, வெங்கடாசலபுரம், இளையரசனேந்தல், பிச்சைத்தலைவன்பட்டி, கஸ்தூரிரங்கபுரம், ஜமீன்தேவர்குளம், பிள்ளையார்நத்தம், படர்ந்தபுளி, தோணுகால் வழியாக இனாம்மணியாச்சியில் நிறைவடைந்தது. 
இதில், காவல் துறை உதவி ஆய்வாளர்கள் முத்துவிஜயன், ராமசாமி உள்பட திரளான காவலர்கள் கலந்துகொண்டனர். பேரணியின் போது ஆங்காங்கே பொதுமக்களிடம் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்த துண்டுப் பிரசுரங்களையும் விநியோகித்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →