முகப்பு
தூத்துக்குடி

உலக திருக்குறள் பேரவை கருத்தரங்கம்

தூத்துக்குடியில் உலக திருக்குறள் பேரவையின் மாதாதந்திர கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.

Updated On : 9 ஜூலை, 2018 at 7:41 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:40 PM

தூத்துக்குடியில் உலக திருக்குறள் பேரவையின் மாதாதந்திர கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.
பேரவைத் தலைவர் குருலட்சுமி தலைமை வகித்தார். ஆசிரியர் தேவிகா பொன்னம்பலம், செய்யது முகமது செரிப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்த் திரையிசை பாடல்களில் இலக்கியக் கூறுகள் என்ற தலைப்பில் ஆசிரியர் ஞானபன்னீர்செல்வம் பேசினார். தொடர்ந்து, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ராசலிங்கம் பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சியில், திருக்குறள் பேரவை மாவட்டச் செயலர் மோ. அன்பழகன், பேராசிரியர் சவகர்லால், நிர்வாகிகள் திருக்குறள் அறிவுச்செல்வம், கவிஞர் இளமுருகு, பேராசிரியை சுப்புலட்சுமி, முன்னாள் மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.