முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடியில் நாளை முன்னாள்  படைவீரர்களுக்கான குறைதீர் கூட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சேர்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் செவ்வாய்க்கிழமை (ஜூலை 10) நடைபெறுகிறது.

Updated On : 9 ஜூலை, 2018 at 7:39 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:40 PM

தூத்துக்குடி மாவட்டத்தில் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சேர்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் செவ்வாய்க்கிழமை (ஜூலை 10) நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களைச் சேர்ந்தோருக்கான  சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் செவ்வாய்க்கிழமை (ஜூலை 10) முற்பகல் 11.30 மணிக்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள சிப்பிக் கூடத்தில் நடைபெறுகிறது.  இக்கூட்டத்தில், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களைச் சேர்ந்தோர்  கலந்துகொண்டு தங்களது குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.