தூத்துக்குடி

கோவில்பட்டி பாலிடெக்னிக் கல்லூரி விளையாட்டு விழா

DIN

கோவில்பட்டி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியின் 34ஆவது ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது.
இவ்விழாவுக்கு, கே.ஆர். கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் கே.ஆர்.அருணாசலம் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினரான முன்னாள் தேசிய கால்பந்து விளையாட்டு வீரர் டக்ளஸ் பொன்ராஜ் விளையாட்டுப்  போட்டிகளை தொடங்கிவைத்தார்.
விளையாட்டுத் துறை இயக்குநர் சிவராஜ் அறிக்கை வாசித்தார்.  போட்டிகளில் வென்ற அணியினருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. குழு விளையாட்டில் நீல நிற அணி, ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றது. தனி நபர் பிரிவில்  பச்சை நிற அணியின் மாணவர் ராகுல், மாணவிகள் பிரிவில் செளந்தர்யா ஆகியோர் பரிசு பெற்றனர். விழாவில், நேஷனல் பொறியியல் கல்லூரி இயக்குநர் சொக்கலிங்கம், கல்லூரி முதல்வர் சண்முகவேல், கே.ஆர். கலை அறிவியல் கல்லூரி முதல்வர் கண்ணப்பன், ஆசிரியர்கள், மாணவர், மாணவிகள் கலந்துகொண்டனர். இயந்திரவியல் துறை முதுநிலை விரிவுரையாளர் சத்தியமூர்த்தி வரவேற்றார்.  மாணவர் ராஜன் நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஜெயக்குமாா் மரணம்: குழு அமைத்து விசாரணை’

இந்தியாவின் ஊராட்சி அமைப்புகள் பெண்கள் தலைமைக்கு முன்னோடி: ஐ.நா.வுக்கான இந்திய தூதா்

என் மீது வீண் பழி: ரூபி மனோகரன் விளக்கம்

காங்கிரஸ் நிர்வாகி மரணம்- 7 தனிப்படைகள் அமைப்பு: நெல்லை காவல் கண்காணிப்பாளர்

ஜூன் 1-இல் ஹிமாசல் தோ்தல் பணிகளில் என்சிசி

SCROLL FOR NEXT