சாத்தான்குளத்தில் ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம்
சாத்தான்குளத்தில் இரண்டாம் கட்ட பதவி உயர்வு, கலந்தாய்வு நடத்தக் கோரி ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சாத்தான்குளத்தில் இரண்டாம் கட்ட பதவி உயர்வு, கலந்தாய்வு நடத்தக் கோரி ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சாத்தான்குளம் உதவி தொடக்கக் கல்வி அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, வட்டாரத் தலைவர் செல்லப்பா தலைமை வகித்தார். முன்னாள் மாநிலப் பொதுக்குழு உறுப்பினர்கள் சுந்தரலிலிங்கம், சமாதானம் பீட்டர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டாரச் செயலர் அந்தோணி சார்லஸ் வரவேற்றார்.
மாவட்ட துணைத் தலைவர் அன்னலீலா, வட்டார துணைத் தலைவர் பிரின்ஸ் ஜட்சன், தமிழ்நாடு ஓய்வு பெற்ற அனைத்து பள்ளி ஆசிரியர் சங்க வட்டாரத் தலைவர் பவுல்ராஜ், துணைத் தலைவர் ரோசாலிலி விஜிதா ஆகியோர் கோரிக்கைகளை வலிலியுறுத்தி பேசினர். வட்டாரப் பொருளாளர் ஸ்டீபன்தாஸ் நன்றி கூறினார்.