தூத்துக்குடியில் காசநோய் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
காசநோய் மையங்களில் பணியாற்றும் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட காசநோய் மையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காசநோய் மையங்களில் பணியாற்றும் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட காசநோய் மையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில் காசநோய் மையங்களில் தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றி வருபவர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி, காசநோய் மையத்தில் பணிபுரியும் பணியாளர்கள் திங்கள்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடி கடற்கரை சாலையில் உள்ள காசநோய் மையம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு காசநோய் பணியாளர் சங்க மாநிலத் தலைவர் மாரியப்பன் தலைமை வகித்து கோரிக்கைகள் குறித்து பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில், காசநோய் மையத்தில் பணிபுரியும் பணியாளர்கள் கலந்து கொண்டு தங்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.