தூத்துக்குடி

கோவில்பட்டி ரயில் நிலையத்தில் இளைஞரை தாக்கி பணம் பறிப்பு

DIN

கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நடைமேடை அருகே நடந்து சென்று கொண்டிருந்த பட்டதாரி இளைஞரை தாக்கி பணம் பறித்த மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
கோவில்பட்டியையடுத்த முடுக்கலாங்குளம் நடுத் தெருவைச் சேர்ந்த ராமமூர்த்தி மகன் சமுத்திரப்பாண்டியன் (21). பி.எஸ்.சி. பட்டதாரியான இவர், தூத்துக்குடியில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் அரசுத் தேர்வுக்காக படித்து வருகிறாராம். இந்நிலையில் திங்கள்கிழமை மைசூர் - தூத்துக்குடி ரயிலில் செல்வதற்காக கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நடைமேடையில் நடந்து சென்று கொண்டிருந்தாராம். அப்போது அவரை வழிமறித்த 3 மர்ம நபர்கள் அவரை தாக்கி அவரிடமிருந்த ரூ.2ஆயிரத்தை பறித்தனர். இதில் காயமடைந்த சமுத்திரப்பாண்டியன் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில், தூத்துக்குடி ரயில்வே போலீஸார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

SCROLL FOR NEXT