தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் உடன்குடி கிளை சார்பில் வட்டியின் தீமைகள் குறித்த விழிப்புணர்வு தெருமுனை பிரசாரக் கூட்டம் நடைபெற்றது.
உடன்குடி கிளை தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் தௌலத்துல்லா தலைமை வகித்தார். அமைப்பின் மாவட்ட அமைப்பாளர் புஹாரி பங்கேற்று வட்டிக் கொடுமை, வட்டி குறித்த இஸ்லாம் பார்வை, திருக்குர்ரான் மாநில மாநாடு ஆகியவை குறித்து பேசினார். இதில், தவ்ஹீத் ஜமாஅத் உடன்குடி கிளைச் செயலர் குத்புதீன், பொருளாளர் உமர், துணைத் தலைவர் யூசுப், துணைச் செயலர் ஹாஜாமுஹைதீன், மருத்துவரணி இப்ராஹிம் ஆகியோர் பங்கேற்றனர். வட்டியின் தீமைகள் குறித்த விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.