தூத்துக்குடி

குழந்தைகள் தின விழாவில் உறுதிமொழி ஏற்பு

DIN

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தைகள் தின விழா புதன்கிழமை நடைபெற்றது.  நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையில் மாணவர்கள் மற்றும் அலுவலர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
மேலும், ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர் மு. வீரப்பன் மற்றும் பல்வேறு நிலையில் உள்ள அலுவலர்கள் சைல்டு லைனுடன் நண்பராகுங்கள் என்ற வாசகத்துடன் கூடிய ராக்கி கயிறை குழந்தைகளுக்கு கட்டி தங்களது அன்பை வெளிப்படுத்தினர். தொடர்ந்து, சைல்டு லைன் 1098-இன் மூலம் பல்வேறு சூழ்நிலையிலிருந்து மீட்கப்பட்ட குழந்தைகளுக்கு மாவட்ட ஆட்சியர் புத்தகங்களை வழங்கினார்.
இதேபோல், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற குழந்தைகள் தின விழாவில், சைல்டு லைனுடன் நண்பராகுங்கள் என்ற வாசகத்துடன் கூடிய ராக்கி கயிறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் குழந்தைகளின் கையில் கட்டி வாழ்த்து தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் உடல் பிரேத பரிசோதனை

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

SCROLL FOR NEXT