தூத்துக்குடி

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி செயற்குழுக் கூட்டம்

DIN

தூத்துக்குடி தெற்கு மாவட்ட விடுதலைச்சிறுத்தைகள் கட்சி செயற்குழுக் கூட்டம் வீரபாண்டியன்பட்டணத்தில் நடைபெற்றது.
இக்கட்சி சார்பில் வருகிற டிச.10ஆம் தேதி திருச்சியில், தேசம் காப்போம் என்ற தலைப்பில் மாநாடு நடைபெற உள்ளது. இது தொடர்பாக நடைபெற்ற இந்த சிறப்பு செயற்குழுக் கூட்டத்துக்கு மாவட்டச் செயலர் முரசு. தமிழப்பன் தலைமை வகித்தார். மண்டலச் செயலர் சொ.சு.தமிழினியன், மாவட்ட நெறியாளர் சேனா.தமிழ்ப்பாண்டியன், மாவட்டப் பொருளாளர் சி.பா.பாரிவள்ளல், கொள்கை பரப்பு அணி மாநில துணைச் செயலர் இர.பு.தமிழ்க்குட்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலப் பொதுச் செயலர் மா.செ.சிந்தனைச்செல்வன் மாநாடு தொடர்பான விளக்கவுரையாற்றினார்.
கூட்டத்தில், மீனவரணி மாநில துணைச் செயலர் மங்கை சேகர், திருச்செந்தூர் பேரவைத் தொகுதிச் செயலர் பொ.வெற்றிவேந்தன், மாவட்ட செய்தித் தொடர்பாளர் மு.வடிவேல்முத்து, மாவட்ட அமைப்பாளர்கள் மு.தமிழ்பரிதி, சு.விடுதலைச்செழியன், மு.ரகுவரன், செங்கோல் மணி, சிவா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது

சிதம்பரம்: வடலூர் பெருவெளி ஆர்ப்பாட்டத்திற்கு சென்றவர்கள் கைது!

கோடைக்காலம் வந்துவிட்டது...!

உதகைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து: போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

பூமியை நெருங்கும் எரிகற்கள்: எச்சரிக்கும் நாசா! என்ன நடக்கும்?

SCROLL FOR NEXT