தூத்துக்குடி

சாத்தான்குளம் அருகே மழைக்கு 2 வீடுகள் இடிந்தன

DIN

சாத்தான்குளம் அருகே மழைக்கு 2 வீடுகள் வெள்ளிக்கிழமை  இடிந்து விழுந்தன. 
கஜா புயல் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவு முதல் பல இடங்களில் மழை பெய்தது.  சாத்தான்குளம் பகுதியில்  வெள்ளிக்கிழமை காலை மழை கொட்டித்தீர்த்தது. இதில், புதுக்குளம் கிராமத்தில் வள்ளியம்மாள் என்பவரது ஓட்டு வீடும், முத்தம்மாள் என்பவரது வீட்டின் சுவரும்  இடிந்து விழுந்தன.அப்போது, இருவரது வீட்டிலும் யாரும் இல்லாததால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது; பொருள்கள் சேதமடைந்தன. இத்தகவல் அறிந்த சாத்தான்குளம்  வட்டாட்சியர் ஞானராஜ், வருவாய் ஆய்வாளர் தங்கசாமி, கிராம நிர்வாக அலுவலர் கந்தவள்ளிக்குமார் ஆகியோர் பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோண்டத் தோண்டக் கிடைக்கும் வைரக்கற்கள்!

ரஷியாவில் குட் பேட் அக்லி படப்பிடிப்பு?

அனைத்து மக்களுக்கும் 100 யூனிட் விலையில்லா மின்சாரம் கிடைக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

பள்ளிகள் திறப்பதற்கு முன் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்: பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை

‘கிராண்ட் பிரிக்ஸ்’ விருதை வென்று அசத்திய இந்திய திரைப்படம்!

SCROLL FOR NEXT