தூத்துக்குடி

மின்வாரிய ஒப்பந்த  தொழிலாளர்கள் போராட்டம்

DIN

மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடியில் வியாழக்கிழமை தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும்; அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் ஒப்பந்தத்தின்படி தினக்கூலி ரூ. 380 வழங்க வேண்டும்; மின்வாரியத்தில் காலியாக உள்ள 45,500 பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் தூத்துக்குடி மாவட்ட கிளை சார்பில் நடைபெற்ற போராட்டத்துக்கு, திட்டச் செயலர் ரவிதாகூர் தலைமை வகித்தார்.
சிஐடியூ மாநிலச் செயலர் ஆர். ரசல், மத்திய அமைப்பின் மாநில துணைத் தலைவர் வை. பாலசுப்பிரமணியன், மாநிலச் செயலர் அப்பாத்துரை, மண்டல செயலர் பீர்முகமதுஷா ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர். தர்னாவில் மின் வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொதிக்கிற வெய்யிலில்... ஷிவானி!

சபரிமலை கோயில் இன்று மாலை திறப்பு!

பிரதமரின் வேட்புமனு தாக்கலில் கலந்து கொண்ட அன்புமணி, ஜி.கே.வாசன்!

சுட்டெரிக்கும் வெயில்! -திறந்தவெளி கட்டுமானப் பணிகளுக்கு நேரக் கட்டுப்பாடு அமல்

மார்க் ஸுக்கர்பெர்க் பிறந்தநாள் இன்று!

SCROLL FOR NEXT