தூத்துக்குடி

எள்ளுவிளையில் அபாய நிலையில் பயணிகள் நிழற்குடை

DIN


எள்ளுவிளையில் அபாய நிலையில் காணப்படும் பயணிகள் நிழற்குடையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாத்தான்குளம் ஒன்றியம் அழகப்பபுரம் ஊராட்சிக்குள்பட்ட எள்ளுவிளையில் பெரியதாழை - மணப்பாடு பிரதான சாலையில் பயணிகள் நிழற்குடை உள்ளது. இந்த நிழற்குடை அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டதாலும், உரிய பராமரிப்பு இன்றி காணப்படுவதாலும், மேற்கூரை பகுதியில் விரிசல் உண்டாகி மேல்பூச்சு விழுந்து வருகிறது. நிழற்குடை இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், இதை அதிகாரிகள் பார்வையிட்டு உடனடியாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீலகிரியில் மே 10ல் உள்ளூர் விடுமுறை!

பிறந்தநாளில் இப்படியொரு போஸ்டரா? கவனம் ஈர்த்த அப்புக்குட்டி!

ஆம்பூர் அருகே கோழிப்பண்ணையில் தீ: 5000 கோழிகள் பலி - ரூ.10 லட்சம் இழப்பு

பேருந்தில் தீ: 4 வாக்கு இயந்திரங்கள் நாசம்!

காங்கிரஸ் தலைமைக்கு ரே பரேலி மீண்டும் தயார்: பிரியங்கா

SCROLL FOR NEXT