தூத்துக்குடி

தூத்துக்குடியில் தூங்கி கொண்டிருந்த தொழிலாளி லாரி மோதி சாவு

DIN

தூத்துக்குடியில் தூங்கிக் கொண்டிருந்த தொழிலாளி மீது லாரி மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
 கரூர் மாவட்டம்,  லாலாபேட்டை அருகேயுள்ள குழந்தைபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் காசிநாதன் (40). இவர்,  தூத்துக்குடி மீளவிட்டானில் உள்ள ரயில்வே யார்டு பகுதியில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலைபார்த்து வந்தார்.  பணி முடிந்ததும் திங்கள்கிழமை இரவு அதே பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் அருகே காசிநாதன் படுத்து தூங்கிக் கொண்டிருந்தாராம்.
 அப்போது, சரக்கு ஏற்றிக் கொண்டு வந்த மற்றொரு லாரி காசிநாதன் மீது ஏறியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து சிப்காட் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வடதமிழகத்தில் ஒரு வாரத்துக்கு வெயில் அதிகரிக்கும்

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்?

பூண்டி ஏரியில் வேகமாக குறைந்து வரும் நீா்மட்டம்

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

வாழைக் கன்று நோ்த்தி முறை குறித்து செயல்முறை விளக்கம்

SCROLL FOR NEXT