முகப்பு
தூத்துக்குடி

ஆழ்வார்திருநகரியில் விடுதலைச் சிறுத்தைகள் தெருமுனை பிரசாரக் கூட்டம்

ஆழ்வார்திருநகரி காமராஜர் சிலை முன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தெருமுனைப் பிரசாரம் நடைபெற்றது. 

Updated On : 3 செப்டம்பர், 2018 at 8:09 AM
பகிர்:

ஆழ்வார்திருநகரி காமராஜர் சிலை முன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தெருமுனைப் பிரசாரம் நடைபெற்றது. 
கூட்டத்துக்கு மண்டலச் செயலர் தமிழினியன் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலர் பூலான்பாண்டியன் வரவேற்றார். கூட்டத்தில் மாநில அமைப்பாளர் தமிழ் குட்டி,  ஸ்ரீவைகுண்டம் தொகுதிச் செயலர் கோ. திருவள்ளுவன், மாநில துணை அமைப்பாளர் கல்விளை அந்தோணி, மாநில தொண்டரணி மாநில அமைப்பாளர் ஏ.போ. சுதாகர், கிறிஸ்தவ சமூக நல்லிணக்கப் பேரவை செங்கோல்மணி, உடன்குடிஒன்றியச் செயலர் சங்கர், ஓன்றியப் பொருளாளர் செல்வக்குமார், நகரச் செயலர் மாணிக்கம், நாசரேத் நகரச் செயலர் பாஸ்கர்தாஸ், நகர துணைச் செயலர் ஜெயபால் மற்றும் கட்சியின் பொறுப்பாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.  நகரச் செயலர் ஐய்யப்ப நன்றி கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.