இலுப்பையூரணியில் கோ பூஜை
கோவில்பட்டியையடுத்த இலுப்பையூரணியில் உலக மக்கள் நலன் வேண்டி கோ பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கோவில்பட்டியையடுத்த இலுப்பையூரணியில் உலக மக்கள் நலன் வேண்டி கோ பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இலுப்பையூரணி ஸ்ரீ நரசிம்ஹ தீர்த்தத்தில் அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீ பாலகோபால கோ சாலையில் உலக மக்களின் நலன் வேண்டியும், மழை வேண்டியும், இயற்கை வளம் செழிக்கவும் மற்றும் கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை கோ பூஜை நடைபெற்றது.
முன்னதாக கணபதி ஹோமம், மகா கணபதி பூஜை, மகா சங்கல்பம், ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து, இலுப்பையூரணி சீதாராம சுவாமி தலைமையில் பஜனையும், கோ பூஜையும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
ஏற்பாடுகளை ஸ்ரீ பாலகோபால கோசாலை அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.