மாநில யோகா போட்டி: சாத்தான்குளம் பள்ளி சிறப்பிடம்
மாநில அளவிலான யோகாசனப் போட்டியில், சாத்தான்குளம் மேரி இமாகுலேட் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்கள் 10 பேர் சிறப்பிடம் பெற்றனர்.
மாநில அளவிலான யோகாசனப் போட்டியில், சாத்தான்குளம் மேரி இமாகுலேட் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்கள் 10 பேர் சிறப்பிடம் பெற்றனர்.
தமிழ் கலாசார அமைப்பு, யோகா விளையாட்டு அறக்கட்டளை ஆகியவற்றின் சார்பில், கோவில்பட்டியில் நடைபெற்ற இப்போட்டியில், மாநிலம் முழுவதுமிருந்து 1,700 மாணவ- மாணவிகள் கலந்துகொண்டனர். இதில், சாத்தான்குளம் மேரி இமாகுலேட் மெட்ரிக் பள்ளி மாணவர்கள்ஜார்ஜ்ஷனா ( 8ஆம் வகுப்பு ), தனுஷ்கரன் (5ஆம் வகுப்பு), கபிரேஷ் ( 4ஆம் வகுப்பு), மாணவி அபிவினோதினி (5ஆம் வகுப்பு) ஆகியோர் முதல் பரிசையும், மாணவி ஆர்த்தி லட்சுமி (8ஆம் வகுப்பு ), மாணவர்கள் ஆண்டனி இன்பென்ட் (4ஆம் வகுப்பு), மாணவன் செல்வதாமஸ் (3ம் வகுப்பு) ஆகியோர் இரண்டாம் பரிசையும், ஆண்ட்ரூஸ் (4ஆம் வகுப்பு ), ஹரிஷ்அனித்ஜார்ஜ்(3ஆம் வகுப்பு), ஆண்டோ ஜெரோமியா ராய்சன் (1ஆம் வகுப்பு) ஆகியோர் மூன்றாம் பரிசையும் பெற்றனர்.
பரிசு பெற்ற மாணவ- மாணவிகளை பள்ளித் தாளாளர் மற்றும் முதல்வர் செல்வராயர், யோகா பயிற்சியாளர் வெற்றிவேல், யோகா பொறுப்பாசிரியர் சகாயலிட்டில், உடற்கல்வி ஆசிரியர் ரீகன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.