மாவட்ட ஸ்கேட்டிங்: கோவில்பட்டி காமராஜ் பள்ளி சிறப்பிடம்
தூத்துக்குடி மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில், கோவில்பட்டி காமராஜ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி சிறப்பிடம் பெற்றுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில், கோவில்பட்டி காமராஜ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி சிறப்பிடம் பெற்றுள்ளது.
தூத்துக்குடி ஷரா ஸ்கேட்டிங் கிளப்பில், தூத்துக்குடி ஸ்பீடு ஸ்கேட்டிங் கிளப் சார்பில் மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் மாவட்டத்தைச் சேர்ந்த 75 மாணவர், மாணவிகள் கலந்துகொண்டனர்.
இதில், காமராஜ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவர் ஆரியபாலன் 10 வயதுக்கு உள்பட்டோர் பிரிவில் முதலிடமும், 12 வயதுக்கு உள்பட்ட பிரிவில் தீனதயாள், மனோஜ்குமார் ஆகியோர் முதலிடமும், இன்லைன் பிரிவில் சூரியபெருமாள் முதலிடமும், 12 வயதுக்கு உள்பட்டோர் பிரிவில் அஸ்வந்த் முதலிடமும் பெற்றனர்.
மாவட்ட அளவில் வெற்றி பெற்ற 5 மாணவர்களும் சென்னை நேரு ஸ்டேடியத்தில் அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள மாநில அளவிலான போட்டியில் பங்குபெற தகுதி பெற்றுள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளிச் செயலர் செந்தில்கனிராஜா, பொருளாளர் செல்வம் மற்றும் பள்ளி நிர்வாகக் குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் பாராட்டினர்.