தூத்துக்குடி

பிரணாப் முகர்ஜிக்கு கருப்புக் கொடி காட்டிய வழக்கு: வைகோ விடுதலை

DIN

பிரணாப் முகர்ஜி தூத்துக்குடி வந்தபோது கருப்புக் கொடி காட்டிய வழக்கில் மதிமுக பொதுச் செயலர் வைகோ உள்ளிட்ட 83 பேரை விடுதலை செய்து தூத்துக்குடி இரண்டாவது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார்.
தூத்துக்குடியில் கடந்த 2009ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி புதிய அனல் மின் நிலைய அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட அப்போதைய மத்திய வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜிக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி காட்டியதாக மதிமுக பொதுச் செயலர் வைகோ உள்ளிட்ட 83 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு தூத்துக்குடி இரண்டாவது குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பிஸ்மிதா, குற்றம்சாட்டப்பட்ட வைகோ உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 83 பேரையும் விடுதலை செய்து செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

SCROLL FOR NEXT