தூத்துக்குடி

முக்காணியில் தூய்மை இந்தியா விழிப்புணர்வு பேரணி

DIN

முக்காணியில் பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்ற தூய்மை இந்தியா விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
மத்திய அரசின் மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் சார்பில், தூய்மை இந்தியா விழிப்புணர்வு நிகழ்வுகள், முக்காணி ஊராட்சி ஓன்றிய தொடக்கப் பள்ளியில் சுகாதாரம் பற்றிய சமுதாய பங்களிப்பு விழாவாக நடத்தப்பட்டது. சுற்றுப்புற சுகாதாரத்தை வலிலியுறுத்தி மாணவ, மாணவியர் விழிப்புணர்வு பேரணி நடத்தினர். இதையொட்டி நடைபெற்ற சுகாதார விழிப்புணர்வு கண்காட்சியில் மாணவ, மாணவியரின் கண்கவர் விழிப்புணர்வு கலைப் படைப்புகள் இடம் பெற்றன. மேலும், தூய்மை இந்தியா தலைப்பில் மாணவி சந்தியா உரையாற்றியதை, நிகழ்ச்சியில் கலந்து கொண்ட துணை ஆட்சியர் பிரசாத் பாராட்டி கெளரவித்தார். நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியை வசந்தகுமாரி, பெற்றோர் ஆசிரியர்கள் சங்கத் தலைவர் சங்கரநாராயணன், பள்ளி மேலாண்மை குழுத் தலைவர் லெ. வேலாயுதம் உள்பட பலர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: புதுச்சேரியில் 4, 817 போ் எழுதினா்

பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை: 4 போ் கைது

நீட் தோ்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 4,855 போ் எழுதினா்

வீட்டினுள் இளைப்பாறிய புள்ளி மான்!

SCROLL FOR NEXT