தூத்துக்குடி

கயத்தாறு அருகே கார் மோதி அடையாளம் தெரியாத பெண் சாவு

DIN

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே வெள்ளிக்கிழமை இரவு சாலையைக் கடக்க முயன்ற பெண் மீது கார் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். 
திருநெல்வேலி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கயத்தாறு - ராஜாபுதுக்குடி சாலையில் ஹோட்டல் அருகே சாலையைக் கடக்க முயன்ற பெண் மீது திருநெல்வேலியில் இருந்து மதுரை நோக்கி சென்று கொண்டிருந்த கார் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். 
தகவலறிந்தவுடன் சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸார் சடலத்தை கைப்பற்றி திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
சுமார் 35 வயது மதிக்கத்தக்க இவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. இதுகுறித்து கயத்தாறு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
மேலும், கார் ஓட்டுநர் பாளையங்கோட்டை அன்பு நகர் 2ஆவது தெருவைச் சேர்ந்த சண்முகசுந்தரம் மகன் மாணிக்கத்தை(30) கைது செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

வெண்பனிச்சாரல்!

SCROLL FOR NEXT