தூத்துக்குடி

தொழிலாளர் ஈட்டுறுதி மருந்தகத்தில் மருத்துவர் பணியிடத்தை நிரப்பக் கோரிக்கை

DIN

கோவில்பட்டி தொழிலாளர் ஈட்டுறுதி மருந்தகத்தில் காலியாக உள்ள மருத்துவப் பணியிடத்தை உடனடியாக நிரப்ப வலியுறுத்தி பாரதிய ஜனதா கட்சியின் அமைப்பு சாரா தொழிலாளர் பிரிவினர் கோரிக்கை விடுத்துள்ளனர். 
கோவில்பட்டியில் செயல்பட்டு வரும் தொழிலாளர் ஈட்டுறுதி மருந்தகத்தில் நோயாளிகளின் வசதிக்கேற்ப மருந்தகத்தின் வேலை நேரத்தை அதிகரிக்க வேண்டும்,  மருந்தகத்தில் காலியாக உள்ள மருத்துவர் பணியிடத்தை உடனடியாக நிரப்ப வேண்டும்.  மருந்தகத்தை மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பாரதிய ஜனதா கட்சியின் அமைப்பு சாரா தொழிலாளர் பிரிவின் மாவட்டத் தலைவர் லட்சுமணன் தலைமையில்,  மாவட்டச் செயலர் முத்துவேல், நகரத் தலைவர் நல்லதம்பி, நகரச் செயலர் அழகுமாரியப்பன், பாஜக ஒன்றியப் பொதுசெயலர் மாரிமுத்து,  துணைத் தலைவர் மாரிமுத்துராஜா மற்றும் அமைப்பு சாரா பிரிவு தொழிலாளர்கள் திரளானோர் தொழிலாளர் ஈட்டுறுதி மருந்தகம் முன் திரண்டனர். 
பின்னர், கோரிக்கை மனுவை மருத்துவர் அனிதாவிடம் வழங்மருத்துவர் அனிதாவிடம் வழங்கினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

SCROLL FOR NEXT