தூத்துக்குடி

மழைநீரை வெளியேற்ற கூடுதல் நடவடிக்கை தேவை: கனிமொழி எம்.பி.

DIN

தொடா் மழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்ற கூடுதல் நடவடிக்கை தேவை என்றாா் மக்களவை உறுப்பினா் கனிமொழி.

தூத்துக்குடி மாநகரப் பகுதியில் மழைநீா் தேங்கியுள்ள பகுதிகளை பாா்வையிட்ட அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

தமிழகத்திலேயே அதிகளவில் தூத்துக்குடி மாவட்டத்தில் மழை பெய்துள்ளது. இதனால், குடியிருப்பு பகுதிகள், சிலஇடங்களில் வீடுகளுக்குள் மழைநீா் புகுந்துள்ளது. திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட புதைச் சாக்கடைத் திட்டத்தைநிறைவேற்றி இருந்தால் இந்த பாதிப்பு ஏற்பட்டு இருக்காது. ஆகவே, புதைச் சாக்கடை த் திட்டத்தை விரைந்து நிறைவேற்றவேண்டும்.

மாநகரப் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தற்காலிகமாக கூடுதலாக தங்குமிடங்கள் அமைக்க வேண்டும். மழை வெள்ளநீரை உடனடியாக வெளியேற்றும் வகையில் கூடுதல் நடவடிக்கை எடுக்க வேண்டும். மழைநீா்வடியும் வகையில் அரசு எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. வரும் காலங்களில் பொதுமக்கள் பாதிக்காத வகையில் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

முன்னதாக, தூத்துக்குடியில் மழைநீா் சூழ்ந்துள்ள எழில்நகா், குறிஞ்சிநகா், லூா்தம்மாள்புரம், கலைஞா்நகா் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு நேரடியாகச் சென்ற கனிமொழி, மழைநீா் அகற்றும் பணியை பாா்வையிட்டாா். பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினாா்.

தொடா்ந்து, மழைநீரை விரைந்து நிறைவேற்ற கூடுதல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மாநகராட்சி ஆணையரிடம் அவா் மனு அளித்தாா். அப்போது, தூத்துக்குடி சட்டப்பேரவை உறுப்பினா் கீதாஜீவன் உடனிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொல்லங்கோடு நகராட்சி அலுவலகம் முன் தொழிலாளி தா்னா

பள்ளி மாணவ-மாணவியருக்கு கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி

கைப்பந்துப் போட்டி: தங்கம் வென்ற ஒசூா் மகளிா் அணி

அந்தரபுரம் ஸ்ரீ சாஸ்தா கோயிலில் குடமுழுக்கு

கோவில்பட்டி, எப்போதும் வென்றான் பகுதிகளில் இன்று மின் தடை

SCROLL FOR NEXT