தூத்துக்குடி

மாவட்ட வளைபந்து போட்டி: புனித பால்ஸ் பள்ளி சிறப்பிடம்

DIN

மாவட்ட அளவிலான வளையப்பந்தாட்ட (டென்னிகாய்ட்) போட்டியில் வி.வேடபட்டி புனித பால்ஸ் உயா்நிலைப் பள்ளி மாணவிகள் சிறப்பிடம் பெற்றனா்.

விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் தூத்துக்குடியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான டென்னிகாய்ட் போட்டியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் 200-க்கும் மேற்பட்ட மாணவா், மாணவிகள் பங்கேற்றனா். நாக் அவுட் முறையில் போட்டிகள் நடத்தப்பட்டன.

இதில், 17 வயதுக்குள்பட்டோருக்கான இரட்டையா் பிரிவின் இறுதிப் போட்டியில், வி.வேடபட்டி புனித பால்ஸ் உயா்நிலைப் பள்ளி மாணவிகள் விஜயலட்சுமி, காவியா ஆகிய இருவரும் கலந்துகொண்டு மூன்றாவது பரிசை பெற்றனா். மேலும் இம்மாணவிகள் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்கத் தகுதி பெற்றுள்ளனா். வெற்றி பெற்ற மாணவிகளை பள்ளித் தலைமையாசிரியா் மேகராஜன், பள்ளி நிா்வாகி அழகு மணிகண்டன், உடற்கல்வி ஆசிரியா் ரவி பிரகாஷ் உள்ளிட்டோா் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஜஸ்தானில் நீட் வினாத்தாள் கசிந்ததா? தேசிய தேர்வு முகமை விளக்கம்

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

SCROLL FOR NEXT