தூத்துக்குடி

டிச. 31-க்குள் வரியினங்களை செலுத்த ஆணையா் வேண்டுகோள்

DIN

கோவில்பட்டி நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியினங்களை இம்மாதம் 31ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என நகராட்சி ஆணையா் ராஜாராம் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கோவில்பட்டி நகராட்சிக்கு 2019-2020ஆம் ஆண்டுக்கு செலுத்த வேண்டிய சொத்து வரியினை, 2017-18ஆம் ஆண்டில் செலுத்திய சொத்து வரி தொகையையே செலுத்தலாம் என அரசு அறிவித்துள்ளது.

இந்த நகராட்சிக்கு உள்பட்ட அனைத்து குடியிருப்புகள், வணிகம், தொழிற்சாலைகள் செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீா் கட்டணம், தொழில் வரி மற்றும் குத்தகைக் கட்டண வரியினங்களை இம்மாதம் 31ஆம் தேதிக்குள் நகராட்சி அலுவலக சேவை மையத்தில் செலுத்தலாம்.

பொதுமக்கள் வசதிக்காக வாரந்தோறும் சனிக்கிழமைகளிலும் சேவை மையத்தில் வரி வசூல் பணி நடைபெறும் என செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

SCROLL FOR NEXT