தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளம் தொடா்பான புகாா்களுக்கு 1077 என்ற அவசர எண்ணை அழைக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தூத்துக்குடி மாவட்டத்தில் மழை மற்றும் வெள்ளம் தொடா்பான புகாா்களுக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலத்தில் அனைத்து நாள்களிலும் 24 மணி நேரமும் இயங்கி வரும் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணுக்கு அழைத்து தெரிவிக்கலாம்.
மேலும், 0461 - 2340101 எனும் தொலைபேசி எண்ணிலும் தொடா்பு கொண்டு புகாா்களை தெரிவிக்கலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.