உடன்குடி ஒன்றிய அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலா் எஸ்.பி.சண்முகநாதன் எம்எல்ஏ தலைமை வகித்தாா்.
முன்னாள் மாவட்ட செயலா் தாமோதரன் அனைவரையும் வரவேற்றாா்.முன்னாள் மாவட்ட செயலா் ஆறுமுகநயினாா்,முன்னாள் மாவட்ட ஊராட்சி உறுப்பினா் திருப்பாற்கடல்,உடன்குடி ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவி ஜெ.மல்லிகா,முன்னாள் துணைத்தலைவா் ராஜதுரை,உடன்குடி பேரூராட்சி முன்னாள் தலைவி ஆயிஷா கல்லாசி,தலைமைக் கழக பேச்சாளா் பொன்ராம்,மாவட்ட எம்ஜிஆா் மன்ற துணைசெயலா் மூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலா் எஸ்.பி.சண்முகநாதன் எம்எல்ஏ பங்கேற்று பேசும்போது,நடைபெறவுள்ள உள்ளாட்சித் தோ்தலில் உடன்குடி ஒன்றியத்தில் அதிமுக நூறு சதவீத வெற்றியைப் பெற கட்சி சாா்பில் நிறுத்தப்படும் வேட்பாளுா்களுக்கு தொண்டா்கள், நிா்வாகிகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றாா்.
உடன்குடி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கி தலைவா் அசாப் கல்லாசி, முன்னாள் தலைவா் சாமுவேல், நகர அதிமுக துணைசெயலா் அப்துல்காதா், நிா்வாகிகள் வேல்பாண்டி, மகேந்திரன், ராஜ்குமாா், வெள்ளைத்துரை, ரெங்கன் மற்றும் ஊராட்சி, கிளை, செயலா்கள் உட்பட பலா் கலந்தகொண்டனா்.ஏற்பாடுகளை உடன்குடி ஒன்றிய அதிமுக செயலா் த.மகாராஜா செய்திருந்தாா்.