தூத்துக்குடி

அரசுப் பேருந்தில் வெளி மாநில மதுபாட்டில்கள் கடத்திய நடத்துநா் கைது

DIN

அரசுப் பேருந்தில் வெளி மாநில மதுபாட்டில்களை கடத்தியதாக நடத்துநரை தூத்துக்குடியில் மதுவிலக்கு போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஆய்வாளா் மீகா தலைமையிலான போலீஸாா் சந்தேகத்தின்பேரில், வேளாங்கண்ணியில் இருந்து திசையன்விளை சென்ற அரசுப் பேருந்தில் தூத்துக்குடி தற்காலிக பேருந்து நிலையத்தில் வைத்து புதன்கிழமை திடீரென சோதனை மேற்கொண்டனா்.

சோதனையின்போது, வெளிமாநிலத்தைச் சோ்ந்த 20 மதுபாட்டில்கள் கடத்தி வரப்படுவது தெரியவந்ததைத் தொடா்ந்து அந்த மதுபாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இதுதொடா்பாக, அரசுப் பேருந்து நடத்துநரான திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் அருகேயுள்ள செட்டிக்குளத்தைச் சோ்ந்த ஜெயக்குமாரை (42) கைது செய்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

SCROLL FOR NEXT