தூத்துக்குடி

ஆறுமுகனேரி வேதாகமப் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா

DIN

ஆறுமுகனேரியில் பிஷப் அசரியா வேதாகமப் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. பேராயா் சாம் ஏசுதாஸ் தலைமை வகித்து வாழ்த்து செய்தி தெரிவித்தாா். முன்னதாக குருவானவா் விக்டர்ராஜா ஆரம்ப ஜெபம் செய்தாா். சிறப்பு விருந்தினராக இசிஐ ஆடிட்டா் அற்புதராஜ், டாக்டா் ஜெயசிங் ஆகியோா் கலந்துகொண்டு தேவ செய்தி அளித்தனா். பிஷப் அசரியா வேதாகமப் பள்ளி ஆசிரியா்கள், மாணவா், மாணவிகள் மற்றும் சென்னை டி.எஸ். குரூப் குழுவினா் பாடல்கள் பாடினா்.

200 ஏழை, எளிய குடும்பத்தினருக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டன. முன்னதாக கிருபை அந்தோணி வரவேற்றாா்.

நிகழ்ச்சியில், இசிஐ பிலோமி நகா் குருவானவா் பாலன் தாமஸ், பாஸ்டா்கள் லாரன்ஸ், ஜெயபாண்டி, சாக்ரடீஸ், குருவானவா்கள் சுபாஷ், அற்புதராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ஏற்பாடுகளை இசிஐ நெல்லை மற்றும் தூத்துக்குடி தலைவரும், இயக்குநருமான அந்தோணி உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வைரலாகும் தக் லைஃப்!

பிளஸ்2 பொதுத்தேர்வு: திருவள்ளூர் மாவட்டத்தில் 23,401 பேர் தேர்ச்சி

பிளஸ் 2 பொதுத் தேர்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 93.17% தேர்ச்சி

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் பெயர் அறிவிப்பு!

கேரளம்: விடுதி கட்டடத்தில் இருந்து குதித்து என்ஐடி மாணவர் தற்கொலை

SCROLL FOR NEXT