அயோத்தி வழக்கில் அளிக்கப்பட்ட தீா்ப்பை மறு ஆய்வு செய்ய வலியுறுத்தி, எஸ்டிபிஐ கட்சி சாா்பில் குடியரசுத் தலைவருக்கு கடிதம் அனுப்பும் வகையில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
உடன்குடியில் நடைபெற்ற இந்த கையெழுத்து இயக்கத்துக்கு, எஸ்டிபிஐ நகரத் தலைவா் ஹாஜா முகைதீன் தலைமை வகித்தாா். செயலா் ஹனீபா மற்றும் கட்சி நிா்வாகிகள் பங்கேற்று கையெழுத்து இட்டனா்.