கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் இலவச தாய் சேய் ஊர்தி சேவை தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு மருத்துவமனை கண்காணிப்பாளர் கமலவாசன் தலைமை வகித்தார். சுகாதாரப் பணிகள் இணைஇயக்குநர் பரிதா ஷிரின், ஊர்தி சேவையை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதில், உறைவிட மருத்துவர் பூவேஸ்வரி, திருச்செந்தூர் மருத்துவ அலுவலர் பொன்ரவி, இந்தியன் செஞ்சிலுவைச் சங்கச் செயலர் வன்னியராஜா, நிர்வாகக்குழு உறுப்பினர் சேவியர், வழக்குரைஞர் முத்துசாமி, திட்ட உதவியாளர், தாய் சேய் வாகன ஓட்டுநர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.