கோவில்பட்டி அருள்மிகு சக்தி விநாயகர் சுப்பிரமணியசுவாமி, செல்லியாரம்மன் கோயிலில் வருஷாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, கோயில் நடை அதிகாலை திறக்கப்பட்டு, திருவனந்தல், திருப்பள்ளி எழுச்சி பூஜை, கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. இதையடுத்து, நவகிரக பூஜைகளும், யாகசாலை பூஜையும் நடைபெற்றன. தொடர்ந்து, யாகசாலையில் இருந்து தீர்த்த குடங்கள் பூஜைகள் செய்து பிரகாரம் வழியாக கொண்டு வரப்பட்டது.
பின்னர், விமானங்கள், மூலவர் அருள்மிகு சக்தி விநாயகர், அருள்மிகு செல்லியாரம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது. அன்னதானம் வழங்கப்பட்டது. கோயில் உதவி ஆணையர் ரோஜாலி சுமதா, நிர்வாக அதிகாரி பாலசுப்பிரமணியராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.