தூத்துக்குடி

சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வருஷாபிஷேகம்

DIN

கோவில்பட்டி அருள்மிகு சக்தி விநாயகர் சுப்பிரமணியசுவாமி, செல்லியாரம்மன் கோயிலில் வருஷாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
இதையொட்டி, கோயில் நடை அதிகாலை திறக்கப்பட்டு, திருவனந்தல், திருப்பள்ளி எழுச்சி பூஜை, கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.  இதையடுத்து,  நவகிரக பூஜைகளும், யாகசாலை பூஜையும் நடைபெற்றன. தொடர்ந்து, யாகசாலையில் இருந்து தீர்த்த குடங்கள் பூஜைகள் செய்து பிரகாரம் வழியாக கொண்டு வரப்பட்டது. 
பின்னர், விமானங்கள், மூலவர் அருள்மிகு சக்தி விநாயகர், அருள்மிகு செல்லியாரம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது. அன்னதானம் வழங்கப்பட்டது. கோயில் உதவி ஆணையர் ரோஜாலி சுமதா, நிர்வாக அதிகாரி பாலசுப்பிரமணியராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஞ்சலி.. அஞ்சலி..!

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு: 5 வீரர்கள் காயம்

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT