தூத்துக்குடி

பொத்தகாலன்விளையில்திருக்கல்யாண மாதா கெபி திறப்பு

DIN


சாத்தான்குளம் அருகே உள்ள பொத்தகாலன்விளையில் புதிதாக அமைக்கப்பட்ட திருக்கல்யாண மாதா கெபி திறப்பு விழா நடைபெற்றது. சாஸ்தாவிநல்லூர் குடிநீர் மேம்பாட்டு மையம், விவசாய நலச் சங்கத் தலைவர் வி. எட்வின் காமராஜ் தலைமை வகித்தார். டெய்சி காமராஜ் முன்னிலை வகித்தார். தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் ஏ. லூர்துமணி வரவேற்றார். இதில், சென்னை செங்குன்றம் அருள்தந்தை அருளப்பா கலந்துகொண்டு கெபியை அர்ச்சித்து திறந்து வைத்தார்.
இதில், போலையர்புரம் தொழிலதிபர் சுரேஷ்குமார், சாத்தான்குளம் ஒன்றிய திமுக விவசாய அணி அமைப்பாளர் டேவிட் வேதராஜ், கூட்டுறவு கடன் சங்க நிர்வாகக் குழு உறுப்பினர்கள் ரவிச்சந்திரன், அமல்ராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். வி.ஜெயராஜ் நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்லும் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு எச்சரிக்கை!

தமிழக வெற்றிக் கழகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

உலகளாவிய பெருமை பெற்றது திருக்குறள்: உயர்நீதிமன்ற நீதியரசர் ஆர்.சுரேஷ்குமார்

தீவிர புயலாக வலுப்பெற்றது ரீமெல்!

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் தேரோட்டம்!

SCROLL FOR NEXT