கந்தபுரம் கோயில் கொடை விழா
உடன்குடி அருகே கந்தபுரம் அருள்மிகு சுடலைமாட சுவாமி கோயில் கொடை விழா 3 நாள்கள் நடைபெற்றது.
உடன்குடி அருகே கந்தபுரம் அருள்மிகு சுடலைமாட சுவாமி கோயில் கொடை விழா 3 நாள்கள் நடைபெற்றது.
இதையொட்டி திங்கள்கிழமை அருள்மிகு சுடலைமாட சுவாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள், அன்னதானம் நடைபெற்றது.
செவ்வாய்க்கிழமை முற்பகல் 11 மணிக்கு ஆற்றிலிருந்து புனித நீர் எடுத்து வந்து சிறப்பு பூஜை நடைபெற்றது. மதியம் அன்னதானம், மாலையில் இன்னிசை, இரவில் பூக்குழித் திருவிழா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
மூன்றாம் நாள் நிறைவு பூஜை, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குதல் நடைபெற்றது.