முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடி புறநகர் பகுதிகளில் ஜனவரி 23 மின்தடை

தூத்துக்குடி புறநகர் பகுதிகளில் புதன்கிழமை (ஜன. 23) மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 23 ஜனவரி 2019, 5:54 am IST
பகிர்:

தூத்துக்குடி புறநகர் பகுதிகளில் புதன்கிழமை (ஜன. 23) மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளர் விஜயசங்கரபாண்டியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தூத்துக்குடி அருகேயுள்ள அய்யனார்புரம் துணை மின் நிலையத்தில் புதன்கிழமை (ஜன. 23) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகிறது. 
இதனால், அன்றைய தினம் மாப்பிள்ளையூரணி, அய்யனார்புரம்,  திரேஸ்புரம், தாளமுத்துநகர்,  டேவிஸ்புரம்,  தருவைகுளம்,  சிலுவைப்பட்டி,  அழகாபுரி, ராசபாளையம்,  பட்டினமருதூர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி  முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.