தூத்துக்குடி

திறன் விழிப்புணர்வுப் போட்டிகள்: வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு

DIN


திறன் விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர், மாணவிகளுக்கு பரிசளிக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக, தொழில் நெறி மற்றும் திறன் விழிப்புணர்வு வாரம் அண்மையில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, பள்ளி மற்றும் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் மாணவர், மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி, சிறந்த வாசகங்கள் எழுதும் போட்டி ஆகியவை நடைபெற்றன.
இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர், மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெள்ளிக்கிழமை பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சியில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் பேச்சியம்மாள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக விக்கெட்டுகள்: தமிழக வீரர் நடராஜன் முதலிடம்!

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பலி: விசாரணைக்கு ரயில்வே உத்தரவு

பாகிஸ்தான் பேருந்து விபத்தில் 20 பேர் பலி

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

SCROLL FOR NEXT