தூத்துக்குடி

சாஸ்தாவிநல்லூர் கூட்டுறவு சங்கத்தில் ரூ. 15.30 லட்சம் கடனுதவி அளிப்பு

DIN

சாஸ்தாவிநல்லூர் தொடக்க வேளாண்  கூட்டுறவு கடன் சங்கத்தில் 11 பேருக்கு ரூ. 15.30 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டது.
சாஸ்தாவிநல்லூர் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க  நிர்வாகக் குழுக் கூட்டம்  அதன் தலைவர் அ.லூர்துமணி தலைமையில் நடைபெற்றது. செயலர் ராஜகுமார் வரவேற்றார்.    கூட்டத்தில் 8 உறுப்பினர்களுக்கு மத்திய காலக்கடனாக ரூ. 3,30,000,  3 உறுப்பினர்களுக்கு வீட்டு அடமானக் கடனாக ரூ. 12 லட்சம்  என  மொத்தம் ரூ.15.30 லட்சம் கடனுதவியை பயனாளிக்கு தலைவர் வழங்கினார். கூட்டத்தில்  துணைத் தலைவர் ராபின்சன் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் இருதயராஜ்,  ரவிச்சந்திரன்,  அருள்ராஜ், அமல்ராஜ், சாந்தி, பரணிதேவி, உஷா ஆனந்தி, ரஞ்சிதம், ஜானகி ஆகியோர் கலந்து கொண்டனர்.   உதவிச் செயலர் பெனிஸ்கர் நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகளிா் காங்கிரஸ் நிரவாகிகள் குடியரசு தலைவருக்கு மனு

மதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

25 அரசுப் பள்ளிகள் நூறு சதவீதம் தோ்ச்சி

தேரோடும் வீதியில் புதைவிட மின்கம்பி அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

வா்ணம் பூசும் தொழிலாளி கீழே தவறி விழுந்து பலி

SCROLL FOR NEXT