தூத்துக்குடி

வசந்த் அண்ட் கோ வாடிக்கையாளருக்கு கார் பரிசு

DIN

வாசகம் எழுதும் போட்டியில் வெற்றி பெற்ற தூத்துக்குடியைச் சேர்ந்த ரவிக்குமார் குடும்பத்துக்கு வசந்த் அண்ட் கோ சார்பில் வியாழக்கிழமை கார் பரிசளிக்கப்பட்டது.
வசந்த் அண்ட் கோ நிறுவனத்தின் 41ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு, கடந்த 1-6-2018 முதல் 31-8-2018 வரை பொருள்கள் வாங்கும் வாடிக்கையளர்களுக்கு வாசகம் எழுதும் போட்டி நடத்தப்பட்டது. இதில், தூத்துக்குடி ராஜீவ்நகரை சேர்ந்த ரவிக்குமார் குடும்பத்தினருக்கு முதல் பரிசாக கார் வழங்கப்பட்டது.
தூத்துக்குடி பாலவிநாயகர் கோயில் தெருவில் உள்ள வசந்த் அண்ட் கோ நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நிறுவனத்தின் முதல்மை அதிகாரி சண்முகசுந்தரம் காருக்கான சாவியை ரவிக்குமார் குடும்பத்தினரிடம் வழங்கினார்.
இரண்டாவது பரிசாக சகாயமாதாபட்டினத்தைச் சேர்ந்த மொகைதீன் சம்சுதீன் குடும்பத்தினருக்கு எல்இடி டி.வி., 3ஆவது பரிசாக புதுக்கோட்டையை சேர்ந்த ஹெர்குலஸ் குடும்பத்தினருக்கு பிரிட்ஜ், 4ஆவது பரிசாக நாசரேத்தை சேர்ந்த வல்லபாய் ராஜய்யா குடும்பத்தினருக்கு மைக்ரோவேவ் ஓவன், 5 ஆவது பரிசாக புதுகிராமத்தை சேர்ந்த ராஜமாணிக்கம் குடும்பத்தினருக்கு கேஸ் ஸ்டவ்,  6ஆவது பரிசாக குளத்தூரை சேர்ந்த ஆனந்தகுமார் குடும்பத்தினருக்கு ஃபேன், 7ஆவது பரிசாக அண்ணாநகரை சேர்ந்த மாரிமுத்து குடும்பத்தினருக்கு வாட்டர் ப்யூரிஃபயர் ஆகியவை  வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில், வசந்த் அண்ட் கோ நிறுவன தூத்துக்குடி கிளை மேலாளர் ஜெயக்குமார் மற்றும் ஊழியர்கள் டேனியல், கணேஷ், முனியசாமி, ராம சண்முகம், ஜெயந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: பிளஸ் 2 பொதுத் தேர்வில் 96.10% தேர்ச்சி

ஒடிஸாவில் பாஜக முதல்வர் ஜூன் 10-ல் பதவியேற்பார்: மோடி

வைரலாகும் தக் லைஃப்!

பிளஸ்2 பொதுத்தேர்வு: திருவள்ளூர் மாவட்டத்தில் 23,401 பேர் தேர்ச்சி

பிளஸ் 2 பொதுத் தேர்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 93.17% தேர்ச்சி

SCROLL FOR NEXT