தூத்துக்குடி

ஸ்டெர்லைட் போராட்டத்தில் பங்கேற்றோர் சார்பில் தூத்துக்குடியில் போட்டியிட திட்டம்: கெளதமன்

DIN


ஸ்டெர்லைட் போராட்டத்தில் பங்கேற்றோரின் சார்பில், தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் போட்டியிடத் திட்டமிட்டுள்ளதாக,  தமிழ் பேரரசு கட்சித் தலைவரும் திரைப்பட இயக்குநருமான வ. கெüதமன் தெரிவித்தார்.
தூத்துக்குடியில் சனிக்கிழமை அவர் அளித்த பேட்டி: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற பலர் தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் தங்களின் பிரதிநிதியாக போட்டியிட வேண்டும் என என்னைக் கேட்டுக்கொண்டனர். அதன் அடிப்படையில், தூத்துக்குடியில் பல்வேறு அமைப்பினரை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர்.
இதுதொடர்பாக, இன்னும் ஆலோசனை மேற்கொள்ள வேண்டியுள்ளது. ஆலோசனைக்குப் பிறகு தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவது தொடர்பாக ஓரிரு நாள்களில் அறிவிப்போம். இதற்கு தமிழ் சமூகம் நிதியுதவி அளித்து உதவி செய்ய வேண்டும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

SCROLL FOR NEXT