குலசேகரன்பட்டினம் அருகே உரிய ஆவணங்களின்றி காரில் கொண்டுவரப்பட்ட ரூ. 1 லட்சத்து 7 ஆயிரத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
குலசேகரன்பட்டினம்- உடன்குடி சாலையில் பறக்கும் படை வட்டாட்சியர் முத்துராமலிங்கம், காவல் உதவி ஆய்வாளர் பாபுராஜ் மற்றும் அதிகாரிகள் சனிக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த காரை மறித்து சோதனையிட்டபோது, தூத்துக்குடியைச் சேர்ந்த விக்னேஷ் உரிய ஆவணங்களின்றி ரூ. 1 லட்சத்து 7ஆயிரம் வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், திருச்செந்தூர் தேர்தல் துணை வட்டாட்சியர் கைலாச குமாரசாமியிடம் ஒப்படைந்தனர்.