தூத்துக்குடி

நீரில் மூழ்கி மாணவர் பலி

DIN

மணியாச்சி அருகே நண்பர்களுடன் குளத்தில் குளித்துக் கொண்டிருந்த பள்ளி மாணவர் புதன்கிழமை நீரில் மூழ்கி உயிரிழந்தார். 
   மணியாச்சியை அடுத்துள்ள ஐயப்பபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகன் உடையார் கண்ணன் (14), கடம்பூர் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்தார்.  இந்நிலையில் நண்பர்களுடன் புதன்கிழமை அங்குள்ள குளத்திற்கு குளிக்கச் சென்ற போது  ஆழமான பகுதிக்கு சென்ற உடையார்  கண்ணன் சேற்றில் சிக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டு தண்ணீருக்குள் மூழ்கினராம்.  இதையடுத்து அங்கிருந்தவர்கள் நீரில் மூழ்கிய  மாணவரை மீட்டு  திருநெல்வேலி  அரசு மருத்துவக் கல்லூரி மனைக்கு கொண்டுசென்றனர்.  ஆனால் செல்லும் வழியிலேயே  அவர் உயிரிழந்தார். இதுகுறித்து நாரைக்கிணறு காவல்துறையினர் வழக்குப் பதிந்து  விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

பளியா் பழங்குடியினா் இதுவரை அரசு பணி வாய்ப்பே பெறவில்லை

SCROLL FOR NEXT