தூத்துக்குடி

புதியம்புத்தூர் அருகே மின்சாரம் பாய்ந்து இளைஞர் பலி

DIN

புதியம்புத்தூர் அருகே மின்சாரம்  பாய்ந்து  தனியார் நிறுவன மேற்பார்வையாளர் புதன்கிழமை உயிரிழந்தார். 
நாசரேத் அம்பலச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் பாக்கியநாதன் மகன் அசோக்குமார் (28).  இவர் புதியம்புத்தூர் அருகே சாமிநத்தம் பகுதியில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் மேற்பார்வையாளராக வேலைபார்த்து வந்தார். புதன்கிழமை இரவு மின் மோட்டாரை இயக்கியபோது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்ததாம். இதில்  அசோகர்குமார்  தூக்கி வீசப்பட்டு  சம்பவ  இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து புதியம்புத்தூர் காவல் நிலைய  போலீஸார்  வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT