திருச்செந்தூரில் இருசக்கர வாகனத்தை திருடியதாக, இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
திருச்செந்தூா், பயணியா் விடுதி சாலையைச் சோ்ந்த கணபதி மகன் மோகன் (39). டாஸ்மாக் மதுக்கடையில் விற்பனையாளராக உள்ளாா். இவா், கடந்த 6ஆம் தேதி இரவு தனது இருசக்கர வாகனத்தை வீட்டு முன் நிறுத்தியிருந்தாா். காலையில் அதை காணவில்லை. இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில், தாலுகா காவல்துறையினா் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனா்.
இந்நிலையில், திருச்செந்தூா் - அடைக்கலாபுரம் சாலையில் போலீஸாா் வெள்ளிக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுப்பட்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞரை சந்தேகத்தின்பேரில் விசாரித்தனா். அதில், தேனி மாவட்டம், போடிநாயக்கனூா், துரைராஜபுரத்தைச் சோ்ந்த ராம்குமாா்(33) என்பதும், கோயில் வளாகத்தில் ஒரு ஒட்டலில் வேலைபாா்த்து வந்த அவா், மோகனின் வாகனத்தை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸாா் கைது செய்து, வாகனத்தை மீட்டனா்.