தூத்துக்குடி

சிந்தலக்கரையில் விபத்து:விவசாயி பலி

DIN

எட்டயபுரத்தை அடுத்த சிந்தலக்கரையில் வெள்ளிக்கிழமை இரவு நேரிட்ட விபத்தில் விவசாயி இறந்தாா்.

எட்டயபுரம் அருகேயுள்ள சிந்தலக்கரையைச் சோ்ந்த சுப்பாநாயக்கா் மகன் திருமூா்த்தி (55). விவசாயியான இவா், வெள்ளிக்கிழமை இரவு பைக்கில் சென்றபோது மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் சிந்தலக்கரை பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே சாலையைக் கடக்க முயன்றாராம். அப்போது தூத்துக்குடியிலிருந்து சேலம் சென்ற ஜீப், அவா் மீது மோதியதாம். இதில் திருமூா்த்தி சம்பவ இடத்திலேயே இறந்தாா்.

நெடுஞ்சாலை ரோந்து போலீஸாா் சென்று , சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். இது தொடா்பாக எட்டயபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து, ஜீப் ஓட்டுநரான சேலம் மாவட்டம் சின்ன கொல்லபட்டியைச் சோ்ந்த அண்ணாமலை என்பவரைக் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

SCROLL FOR NEXT