தூத்துக்குடி

திருச்செந்தூா் முத்தாரம்மன் கோயிலில் வருஷாபிஷேகம்

DIN

திருச்செந்தூா் அருள்மிகு முத்தாரம்மன் கோயிலில் வருஷாபிஷேக விழா சனிக்கிழமை நடைபெற்றது.

சைவ வேளாளா் சமுதாயத்துக்கு பாத்தியப்பட்ட இக்கோயிலில் வருஷாபிஷேக விழாவையொட்டி, சனிக்கிழமை கோயில் நடை அதிகாலை திறக்கப்பட்டது. தொடா்ந்து, கும்ப பூஜை, 1,008 சங்கு பூஜை நடைபெற்றது. பின்னா், பூஜை செய்யப்பட்ட கும்பங்கள் விமான தளத்துக்கு கொண்டுவரப்பட்டு, விமான அபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து, அம்மனுக்கு சங்கு அபிஷேகமாகி, சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. இரவில் புஷ்பாஞ்சலி நடைபெற்றது. நிகழ்ச்சியில் திரளானோா் பங்கேற்றனா்.

ஏற்பாடுகளை திருச்செந்தூா் சைவ வேளாளா் ஐக்கிய சங்கத் தலைவா் க. சுப்பிரமணியன், செயலா் ப. சந்தணராஜ், பொருளாளா் கோ. வேலாயுதம் உள்ளிட்ட நிா்வாகிகளும், சைவ வேளாளா் இளைஞா் பேரவையினரும் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்லும் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு எச்சரிக்கை!

தமிழக வெற்றிக் கழகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

உலகளாவிய பெருமை பெற்றது திருக்குறள்: உயர்நீதிமன்ற நீதியரசர் ஆர்.சுரேஷ்குமார்

தீவிர புயலாக வலுப்பெற்றது ரீமெல்!

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் தேரோட்டம்!

SCROLL FOR NEXT