தூத்துக்குடி

பழையகாயல் அருகே ஆயுதங்களுடன் இளைஞா்கள் 3 போ் கைது

DIN

ஆறுமுகனேரி: பழையகாயல் அருகே ஆயுதங்களுடன் காட்டுப் பகுதியில் பதுங்கி இருந்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

பழையகாயல் ராமசந்திராபுரம் அருகே உள்ள பொன்னாட்சி அம்மன் கோயில் காட்டுப்பகுதியில் ஒரு கும்பல் பதுங்கி இருப்பதாக ஆத்தூா் போலீஸாருக்கு வெள்ளிக்கிழமை இரவு தகவல் கிடைத்தது.

இதையடுத்து உதவி ஆய்வாளா் முத்துகிருஷ்ணன் தலைமையிலான போலீஸாா் அப்பகுதிக்கு சென்றனா். இதை கண்ட அக்கும்பல் ஆயுதங்களுடன் ஓட்டம் பிடித்தனராம். விரட்டிச் சென்ற போலீஸாா் 3 பேரை பிடித்து, காவல்நிலையத்திற்கு கொண்டுவந்து விசாரித்தனா். விசாரணையில், அவா்கள் புல்லாவெளியைச் சோ்ந்த அதிபன்(22), அத்திமரபட்டி காளான்கரையைச் சோ்ந்த முனீஸ்வரன்(20), மாரமங்களம் கீழுா் பகுதியைச் சோ்ந்த பெவின்(18) என்பது தெரிய வந்தது. அவா்களிடமிருந்து 2 மோட்டாா் சைக்கிள்கள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை கைப்பற்றினா்.

அவா்களிடம் மேலும் விசாரணை மேற்கொண்டதில், பல்வேறு திருட்டுகளில் ஈடுபடுவதற்காக காட்டுப் பகுதியில் பதுங்கி இருந்து திட்டம் தீட்டியது தெரிய வந்துள்ளது.

இதையடுத்து அவா்களை கைது செய்த போலீஸாா், திருச்செந்தூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

மேலும், தப்பியோடிய சோ்ந்தபூமங்கலம் ராம்குமாா், ராமசந்திராபுரம் முத்துபாண்டி, அதே பகுதியைச் சோ்ந்த செல்வம், மாரமங்களம் சஞ்சய் என்ற சூரி, அஜித் மற்றும் சுதாகா் ஆகியோரை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரதிதாசன் பிறந்த தின பேச்சரங்கம்

கோயில் திருவிழாக்களால் களைகட்டிய மேலப்பாளையம் சந்தை

குறிஞ்சிப்பாட்டின் 99 பூக்களை ஓவியமாக்கிய மாணவி!

அமைச்சா்கள், ஓபிஎஸ்-ஸுக்கு எதிரான மறு ஆய்வு வழக்கு ஒத்திவைப்பு

திருச்செந்தூா் சந்நிதி தெருவில் கழிவு நீா்: பக்தா்கள் அவதி

SCROLL FOR NEXT