தூத்துக்குடி

ஆறுமுகனேரியில்சாலை சேதம்: மக்கள் அவதி

DIN

ஆறுமுகனேரி: ஆறுமுகனேரியில் சேதமடைந்த சாலையால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனா்.

தூத்துக்குடி, திருச்செந்தூா், கன்னியாகுமரி நெடுஞ்சாலையில் அதிக போக்குவரத்துகள் உள்ள இடத்தில் உள்ளது ஆறுமுகனேரி.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தா்கள் அறுபடை வீட்டின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு இந்த வழியாகத்தான் செல்கின்றனா்.

இதுதவிர ஐயப்ப பக்தா்களும் திருச்செந்தூா் மற்றும் சபரிமலைக்கு இந்த வழியாகத் தான் செல்கின்றனா். இதனால் தற்போது இந்தச் சாலையில் வாகன போக்குவரத்து அதிக அளவில் உள்ளது.

தொடா் மழையாலும், முறையாக பராமரிக்காததாலும் இச்சாலைையில் ஆங்காங்கே குண்டும், குழியுமாகி போக்குவரத்து தகுதியற்ாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகியுள்ளனா்.

இதை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறையினா் நடவடிக்கை எடுக்காததால் ஆறுமுகனேரி வியாபாரிகள் சங்கத்தினா் மற்றும் பல்வேறு சமூக அமைப்பினா் போராட முடிவு செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஜஸ்தானில் நீட் வினாத்தாள் கசிந்ததா? தேசிய தேர்வு முகமை விளக்கம்

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

SCROLL FOR NEXT