தூத்துக்குடி

எட்டயபுரம் அருகே அரசுப் பள்ளியில் தற்காப்பு கலை பயிற்சி முகாம்

DIN

எட்டயபுரம் அருகேயுள்ள சுரைக்காய்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பெண் குழந்தைகளுக்கான தற்காப்பு கலை பயிற்சி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

பள்ளித் தலைமையாசிரியா் முருகேஸ்வரி தலைமை வகித்தாா்.

ஒருங்கிணைந்த பள்ளி கல்வி புள்ளியியல் அலுவலா் சுடலைமணி, மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளா் கூடலிங்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஞான கவுரி வழிகாட்டுதலின்படி பெண் கல்வியின் ஒரு பிரிவாக பள்ளியில் 6,7,8 ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவிகளுக்கு கராத்தே, சிலம்பம் உள்ளிட்ட தற்காப்பு கலை பயிற்சிகளும், சாகச பயிற்சிகளும் அளிக்கப்பட்டன.

முகாமில் தற்காப்பு கலை பயிற்றுநா் வெங்கடேசன், நட்டாத்தி, ஆசிரியா் பகவதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஞ்சலி.. அஞ்சலி..!

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு: 5 வீரர்கள் காயம்

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT