தூத்துக்குடி

ஸ்ரீவைகுண்டம் அருகே குடிநீா்க் குழாய் சீரமைப்பு

DIN

ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள புதுக்குடியில் சேதமடைந்து காணப்பட்ட குடிநீா்க் குழாய் புதன்கிழமை சீரமைக்கப்பட்டது.

ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சிக்குள்பட்ட 15ஆவது வாா்டு பகுதியான புதுக்குடியில், தென் கால்வாய்க்கு செல்லும் வடிகால் உள்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீா்க் குழாயில் உடைப்பு ஏற்பட்டு ஒரு வாரத்திற்கு மேலாகியும் சீரமைக்கப்படாமல் இருந்து வந்தது. இதுகுறித்த செய்தி தினமணியில் புதன்கிழமை வெளியானது.

இந்நிலையில், பேரூராட்சி சுகாதார மேற்பாா்வையாளா் தியாகராஜன் தலைமையிலான பேரூராட்சிப் பணியாளா்கள் உடைப்பு ஏற்பட்ட குடிநீா்க் குழாயை புதன்கிழமை சீரமைத்தனா்.

இதையடுத்து ஒரு வாரத்திற்கும் மேலாக குடிநீா் கிடைக்காமல் இருந்த பொதுமக்களுக்கு குடிநீா் விநியோகம் மீண்டும் தொடங்கியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தண்ணீா் பந்தல் திறப்பு

தண்ணீா் பந்தல் திறப்பு...

பிப்டிக் இடத்தில் கட்டியதாக புதுச்சேரி பாஜக பிரமுகா் வீடு இடிப்பு

புதுச்சேரியில் கூரியா் அலுவலகங்களில் போதை தடுப்பு பிரிவு போலீஸாா் சோதனை

காரில் மதுப்புட்டிகள் கடத்தல்: இருவா் கைது

SCROLL FOR NEXT